டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி பதிவு செய்ய அழைப்பு: கலெக்டர்
கரூர், ஜன. 2-தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மாணவ, மாணவி யருக்கு டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பயிற்சி க்கு பதிவு செய்யலாம் என, கலெக்டர் தங்க வேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குருப்-1, 2 தேர்வுகளுக்கு முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி வழங்கவுள்ளது. இதில், முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மை தேர்விற்கு தேர்ச்சி பெற விரும்பும் மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும், 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களாக இருக்க வேண்டும், விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீன தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு, www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.