பசுமை தோழர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி
கரூர், பசுமை தோழர் பணிக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாளாகும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையின் கீழ், மாவட்ட அளவில் சுற்றுச்சூழல் சேவைகளை திறம்பட வழங்குவதிலும், இளம் நிபுணர்களை ஈடுபடுத்த பசுமைதோழர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பாக விபரங்களை www.environment.tn.gov.inஎன்ற இணையதளத்தில் காணலாம். இப்பணிக்கு நாளைக்குள் (7ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.