உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் /  சிறுமியருக்கு தொல்லை; வியாபாரி கைது

 சிறுமியருக்கு தொல்லை; வியாபாரி கைது

கரூர்: சிறுமியரை வீட்டில் அடைத்து தொல்லை கொடுத்த வியாபாரியை, 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர். கரூர், தொழிற்பேட்டையை சேர்ந்தவர் பகீர் முகமது, 43; இடியாப்ப வியாபாரி. திருமணம் ஆன இவர், நேற்று முன்தினம் மதியம், அதே பகுதியை சேர்ந்த, 12, 10, 7 வயதுடைய மூன்று சிறுமியரை, ஒரு வீட்டில் அடைத்து வைத்து, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த, 12 வயது சிறுமியின் தந்தை, கரூர் மகளிர் போலீசில் புகாரளித்தார். விசாரித்த இன்ஸ்பெக்டர் சுமதி, போக்சோ சட்டத்தில் பகீர் அகமதுவை கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை