உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகளுக்கு, 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு பராமரிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிந்தலவாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட லாலாப்பேட்டை பழைய நெடுஞ்சாலை பிரிவு சாலை முதல், மகிளிப்பட்டி வரை புதிய தார்ச்சாலை கடந்த மாதம் அமைக்கப்-பட்டது. சாலை இருபுறமும் 100க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் பஞ்சாயத்தில் உள்ள, 100 நாள் திட்ட தொழிலாளர்கள் கொண்டு நடப்பட்டது.பின்னர் மரக்கன்றுகளை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டது. இந்நி-லையில் புதிதாக நடப்பட்ட மரக்கன்றுகள் வளர்ந்து வரும் வகையில், தொழிலாளர்களை கொண்டு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி