உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து

குமாரபாளையம் :குமாரபாளையம், எதிர்மேடு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 29; லேத் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, சேலம்-கோவை புறவழிச்சாலை, ஜே.கே.கே., முனிராஜா கல்லுாரி அருகே சாலையை நடந்தபடி கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த டூவீலர், அவர் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். கோபாலகிருஷ்ணனை, ஈரோடு தனியார் மருத்துவமனையிலும்; விபத்துக்கு காரணமான, கோவை தனியார் கல்லுாரி மாணவர் நவீன், 22, கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி