கால்நடைகளுக்கு நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்
கரூர், கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், கால்நடை மருந்தகம் சார்பில், பெரிய காளிப்பாளையத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.அதில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 200க்கும் மேற்பட்ட ஆடு, மாடு, வெள்ளாடுகளுக்கும், ஏழாவது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. முகாமில், கால்நடை உதவி மருத்துவர் மோகன்ராஜ், பராமரிப்பு உதவியாளர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.