உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வல்லம் சுகாதார வளாகம் படுமோசம்: மக்கள் அவதி

வல்லம் சுகாதார வளாகம் படுமோசம்: மக்கள் அவதி

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வல்லம் கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாளடைவில் பராமரிப்பு இல்லாததால், சுகாதார வளாகத்தை சுற்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. வளாகத்தில் உட்புறம் கதவுகள் உடைந்து, துருப்பிடித்து மிகவும் மோசமாக உள்ளன. மேலும், தண்ணீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. சுகாதார வளாகத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல், மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பஞ்., நிர்வாகம் சுகாதார வளாகத்தை துாய்மைப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை