அமித்ஷாவை கண்டித்து பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கரூர், டிச. 21-அம்பேத்கரை அவமதிக்கும் வகையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை கண்டித்து, கரூர், தலைமை தபால்நிலையம் முன், மா.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநகர செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். அமைச்சர் பதவியில் இருந்து அமித்ஷா விலக வேண்டும் என முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலர் ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.* வி.சி.க., மேற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.* மக்கள் அதிகாரம் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.