உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / போலீஸ் ஸ்டேஷன் அருகே வாகனங்கள்: மாணவர்களுக்கு இடைஞ்சல்

போலீஸ் ஸ்டேஷன் அருகே வாகனங்கள்: மாணவர்களுக்கு இடைஞ்சல்

கரூர், கரூர் அடுத்த வெள்ளியணையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளி எதிரே, வெள்ளியணை போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அங்கு, வாகனங்களை நிறுத்த போதுமான இடம் இல்லாததால், சாலையோரங்களில் நிறுத்துகின்றனர். இதுகுறித்து மாணவ, மாணவியரின் பெற்றோர் கூறியதாவது: போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க வருவோர், வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு செல்கின்றனர். மேலும், வாகன சோதனையில் பிடிபடும் லாரி போன்ற கனரக வாகனங்களும் போலீஸ் ஸ்டேஷனையொட்டி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், எதிரில் உள்ள பள்ளிக்கு செல்வதில் இடையூறாக உள்ளது.இந்த இடத்தில் மூன்று பிரிவு சாலைகள் இருப்பதால், கனரக வாகனங்களை நிறுத்தும்போது, திரும்பும் வாகனங்களுக்கு எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர், சமையல் கூடம் பள்ளி எதிரில் உள்ளது. அங்கு செல்ல பிரிவு சாலையை கடந்து செல்ல வேண்டும். அப்போது, வேகமாக வரும் வாகனங்களால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாகனங்கள் நிறுத்த மாற்று இடத்தை தேர்வு செய்வதோடு, சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ