உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கரூர்: மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று அதிகரித்தது.கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 6,898 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு, 7,122 கன அடியாக அதிக-ரித்தது. அந்த தண்ணீர் முழுவதும், காவிரியாற்றில் சம்பா சாகுபடி பணிக்காக திறக்கப்பட்டது. மழை காரணமாக, நான்கு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது.அமராவதி அணை: திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 389 கன அடியாக குறைந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 88.36 அடியாக இருந்தது. அம-ராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்கால், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பு நேற்று நிறுத்தப்பட்டது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு நேற்று காலை, 1,281 கன அடி தண்ணீர் வந்தது. ஆத்துப்பாளையம் அணை: க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்-பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 42 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.68 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 30 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ