உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து சரிவு

கரூர், மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது.கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 17 ஆயிரத்து, 772 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 14 ஆயிரத்து, 469 கன அடியாக சரிந்தது.அதில், டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்காக காவிரியாற்றில், 12 ஆயிரத்து, 999 கன அடியும், தென்கரை வாய்க்காலில், 650 கன அடி தண்ணீரும், கீழ் கட்டளை வாய்க்காலில், 400 கன அடி தண்ணீரும், புதிய கட்டளை வாய்க்காலில், 400 கன அடியும், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 20 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு, 183 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 16.79 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை