உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பெ.ஆ.,கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

பெ.ஆ.,கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கரூர்: கரூர் மாவட்டத்தில், பெய்த மழை காரணமாக, பெரிய ஆண்-டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.கடந்த, 18 முதல், 20 வரை கரூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, அமராவதி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிக-ளான அரவக்குறிச்சி, க.பரமத்தி வட்டாரங்களில் நல்ல மழை பெய்தது. இதனால், கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்ப-ணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கடந்த, 20ல் வினாடிக்கு, 243 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 686 கனஅடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது.* திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 180 கன அடியாக இருந்தது. இதனால், அமராவதி அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட, 50 கன அடி தண்ணீர் வினாடிக்கு, 6 கன அடியாக நேற்று குறைக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 83.47 அடியாக இருந்தது.* கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 5,159 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில், சம்பா சாகுபடி அறுவடை பணிக்காக, 4,509 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இரண்டு பாசன வாய்க்காலில், 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.* க.பரமத்தி அருகே, கார் வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.25 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு, தற்காலிகமாக நிறுத்தப்பட்-டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி