மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
12-Jun-2025
தொழிலாளி மாயம் போலீசில் புகார்
30-Jun-2025
குளித்தலை, குளித்தலை அடுத்த, தோகைமலை பஞ்., புது கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன், 35, டெக்ஸ் கூலித் தொழிலாளி. இவர் வருந்திபட்டி கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா, 31, என்பவரை ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. சமீபத்தில் நடந்த தகராறில் கோபித்துக் கொண்டு, கடந்த, 26ம் தேதி வருந்திபட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மஞ்சுளா சென்றார். இந்நிலையில் அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. கணவர் சந்திரன் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து, மஞ்சுளாவை தேடி வருகின்றனர்.
12-Jun-2025
30-Jun-2025