உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தெரசா கார்னரில் புதிய வேகத்தடை வெள்ளைக்கோடு வரையப்படுமா

தெரசா கார்னரில் புதிய வேகத்தடை வெள்ளைக்கோடு வரையப்படுமா

கரூர்: கரூர் தெரசா கார்னரில் புதிய வேகத்தடையில் வெள்ளைக்-கோடு வரை வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.கரூர் திருச்சி சாலை சுங்ககேட் அருகில் தெரசா கார்னர் சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு, கொளந்தனுார் பிரிவு சாலை இருப்பதால், வாகனங்-களின் வேகத்தை கட்டுப்படுத்திட வேகத்தடை அமைக்கப்பட்-டுள்ளது. வேகத்தடை அமைத்து இரண்டு நாள் கடந்த நிலையில், இன்னும் வெள்ளை வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்களில் செல்பவர்கள் புதிதாக அமைக்கப்பட்-டுள்ள வேகத்தடை தெரியாமல் தடுமாறி வருகின்றனர். அதிலும், இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழும் சம்பவங்-களும் நடந்துள்ளன.இந்த சாலையில் வேகத்தடையில், வெள்ளை வர்ணத்தை பூசி, சாலைகளில் வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் தேவை-யான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலை-துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை