உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக் மீது லாரி மோதி தொழிலாளி பலி

பைக் மீது லாரி மோதி தொழிலாளி பலி

குளித்தலை: குளித்தலை அருகே நாகனுார் பஞ்.. வத்தப்பிள்ளையூர் கணபதி களம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன், 24, கூலி தொழிலாளி. இவர் தனது அப்பாச்சி பைக்கில், நேற்று முன்தினம் காலை வத்த-பிள்ளையூர் சாலையில் வந்து கொண்டிருந்ததார்.அப்போது, எதிரே தரகம்பட்டியில் இருந்து ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் லாரி, வேகமாக வந்து பைக் மீது மோதியது. இதில் மகேந்-திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். தோகைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை