சுவற்றில் பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
குளித்தலை, குளித்தலை அடுத்த, பங்களாபுதுார் அண்ணாநகரை சேர்ந்தவர் பிரேமா, 46, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் கோகுல்ராஜ், 20, வெல்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் காலை 11:30 மணியளவில், தனது நண்பரின் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சொந்த வேலையாக, இனுங்கூரில் இருந்து பெட்டவாய்த்தலை நெடுஞ்சாலையில் வேகமாக சென்றபோது, அண்ணா நகரை சேர்ந்த கோபி என்பவரின் வீட்டு சுவற்றில் மோதினார். இதில் கீழே விழுந்த கோகுல்ராஜூக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.நங்கவரம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நங்கவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.