உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / தனியார் நிறுவனத்தில் மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

தனியார் நிறுவனத்தில் மயங்கி விழுந்து தொழிலாளி சாவு

கரூர், கரூரில் அருகே, தனியார் நிறுவனத்தில் மயங்கி விழுந்த வடமாநில தொழிலாளி இறந்தார்.பீஹார் மாநிலம், சரண் மாவட்டத்தை சேர்ந்தவர் சண்டேஷ்வர், 55. இவர், கரூர் பெரிய ஆண்டாங்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை, 10:00 மணியளில் வேலை செய்து கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக, அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.கரூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !