உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிவப்பு சோளம் அறுவடை பணியில் தொழிலாளர்கள்

சிவப்பு சோளம் அறுவடை பணியில் தொழிலாளர்கள்

கிருஷ்ணராயபுரம், கோவக்குளத்தில், சிவப்பு சோளம் அறுவடை பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த கோவக்குளம், பிச்சம்பட்டி பகுதிகளில் சிவப்பு சோளம் பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். வாய்க்கால் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போது சோளம் பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளது. தற்போது தொழிலாளர்களை கொண்டு அறுவடை பணிகள் நடந்து வருகிறது.விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு, தீவனமாக சோளத்தட்டு கிடைக்கிறது. இதன் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் தட்டுப்பாடு நீங்கியுள்ளது. இந்த பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் சிவப்பு சோளம் சாகுபடி நடந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ