மரக்கன்றுகள் பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள்
கிருஷ்ணராயபுரம்: வரகூர், குழந்தைப்பட்டி சாலையில் மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த கருப்பத்துார் பஞ்சாயத்து வரகூர், குழந்தைப்பட்டி வரை தார் சாலை செல்கிறது. பஞ்சாயத்து சார்பில், சாலையோரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. தற்போது இவை வளர்ந்து வரும் வகையில், பஞ்சாயத்தில் உள்ள 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு நடப்பட்ட மரக்கன்றுகளை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மரக்கன்றுகள் சுற்றி வளர்ந்த களைகள் அகற்றப்பட்டது. சாலையோரம் புளிய மரம், புங்கமரம், வேம்பு ஆகிய மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.