உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / உலக மாஸ்டர் தடகள போட்டி; வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு

உலக மாஸ்டர் தடகள போட்டி; வென்றவர்களுக்கு உற்சாக வரவேற்பு

கிருஷ்ணராயபுரம் : இலங்கையில் நடந்த, உலக மாஸ்டர் தடகள போட்டியில் வயது மூத்தோருக்கான போட்டியில், இந்தியா சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு, கிருஷ்ணராயபுரம் ரயில் நிலையத்தில் மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த வைரவேல், பொய்கைப்புத்துார் சேகர் ஆகியோர், கடந்த, 25, 26 ஆகிய நாட்களில் இலங்கை நாட்டில் நடந்த உலக மாஸ்டர் தடகளத்தில், வயது மூத்தோருக்கான போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டனர். வைரவேல், 400 மீட்டர் அடில்ஸ் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். போல் வால்ட் பிரிவில் சேகர் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்று கிருஷ்ணராயபுரம் திரும்பிய அவர்களுக்கு, அந்த பகுதி சேர்ந்த மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை