உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கிருத்திகையையொட்டி புகழிமலை கோவிலில் பூஜை

கிருத்திகையையொட்டி புகழிமலை கோவிலில் பூஜை

கரூர்: ஆனி மாத கிருத்திகையையொட்டி, கரூர் மாவட்டம், புகழி-மலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில், மூலவருக்கு நேற்று மாலை, பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட, 18 வகையான வாசனை திரவியங்கள் மூலம் அபி-ஷேகம் நடந்தது.அதைதொடர்ந்து, சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் மூலவர், பக்-தர்களுக்கு அருள்பாலித்தார். மஹா தீபாராதனைக்கு பின், பக்தர்-களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.அதேபோல், வெண்ணைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், நன்செய் புகழூர் அக்ரஹாரம் சுப்பிரமணிய சுவாமி கோவில், புன்னம் சத்திரம் பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலும் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ