உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கரூர் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

கரூர் ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை விழா

கரூர்: கரூர், ராகவேந்திரர் சுவாமி கோவிலில், 354வது ஆராதனை மஹோத்ஸவ விழா கடந்த, 9ல் துவங்கியது. 10ல் கனகாபி-ஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், மகா மங்களாரத்தி, தீர்த்தபிரசாதம் நடந்தது. நேற்று முன்தினம் மத்ய ஆராதனை நடந்தது. உத்தர ஆராதனை விழா நேற்று நடந்தது.இதில், பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்பட்டது. பின், மஹா மங்கள ஆரத்தி, தீர்த்தபிரசாதம் நடந்தது. ராகவேந்திரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ