மேலும் செய்திகள்
பணம் பறித்தவர் கைது
25-May-2025
கரூர், கரூர் அருகே, டாஸ்மாக் மதுபான கடை கேஷியரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், 30; செல்லாண்டிப்பாளையம் டாஸ்மாக் மதுபான கடையில், கேஷியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 31 இரவு திருமாநிலையூர் ரவுண்டானா பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் ராயனுார் பகுதியை சேர்ந்த கவுதமன், 28; என்பவர் டூவீலரில் சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலமுருகனிடம் இருந்து, 500 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து, பாலமுருகன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, பசுபதிபாளையம் போலீசார், கவுதமனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
25-May-2025