உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / டாஸ்மாக் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

டாஸ்மாக் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

டாஸ்மாக் ஊழியரை தாக்கிய வாலிபர் கைதுகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த பாலகுறியை சேர்ந்தவர் முனிரத்தினம், 56. தாசம்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார். கடந்த, 13 இரவு கடையில் இருந்தபோது, காவேரிப்பட்டணம் அடுத்த கதிரிபுரத்தை சேர்ந்த பிரகாஷ், 30, என்பவர் அங்கு வந்து, ஒரு பீர்பாட்டில் கடனுக்கு தர கூறினார். அதற்கு முனிரத்தினம் தர மறுத்தார். அந்த நேரம் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த பிரகாஷ், முனிரத்தினத்தை தாக்கி மிரட்டல் விடுத்தார். இது குறித்து, முனிரத்தினம் காவேரிப்பட்டணம் போலீசில் அளித்த புகார் படி, பிரகாசை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ