உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மழையால் மக்கள் மகிழ்ச்சி

மழையால் மக்கள் மகிழ்ச்சி

மழையால் மக்கள் மகிழ்ச்சிகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளியில் நேற்று பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வேப்பனஹள்ளியில் நேற்றும் காலை வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியத்திற்கு மேல் திடீரென கருமேகம் சூழ்ந்து மதியம், 3:00 மணி முதல், 4:---00 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை, 4:30 மணி முதல், சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து, குளிர் காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை