உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பாலக்கோடு அருகே விபத்தில் ஓசூரை சேர்ந்த மூவர் பலி

பாலக்கோடு அருகே விபத்தில் ஓசூரை சேர்ந்த மூவர் பலி

மகேந்திரமங்கலம்: பாலக்கோடு அருகே நின்ற லாரி மீது, கார் மோதியதில் மூன்று பேர் பலியாகினர்.-கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அலசநத்-தத்தை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி முனிகி-ருஷ்ணன், 50; அதே பகுதியை சேர்ந்த இவரின் நண்பர்கள் சீனிவாசன், 47, பசுவராஜ், 38, மஞ்-சுநாத், 47, சந்திரப்பா, 50; இன்னோவா காரில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று முன்தினம் வந்து விட்டு மாலையில் ஓசூர் திரும்-பினர். காரை முனிகிருஷ்ணன் ஓட்டினார். தர்மபுரி - ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையில் பாலக்கோட்டை அடுத்த ஜிட்டாண்டஹள்ளி பிரிவு சாலை அருகே இரவு, 7:30 மணிக்கு கட்-டுப்பாட்டை இழந்த கார், சென்டர் மீடியனில் மோதி எதிர்புற சாலையில் நின்ற சரக்கு லாரி மீது மோதியது. இதில் கார் இடிபாடுகளில் சிக்கிய முனி கிருஷ்ணன் பலியான நிலையில், மற்ற நால்-வரும் படுகாயமடைந்தனர். மகேந்திரமங்கலம் போலீசார் நால்வரையும் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், பசுவராஜ் இறந்தார். பெங்களுரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்-லப்பட்ட சீனிவாசனும் இறந்தார். மஞ்சுநாத், சந்-திரப்பா தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகேந்திரமங்-கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை