உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கல் கடத்திய 2 லாரி பறிமுதல்

கல் கடத்திய 2 லாரி பறிமுதல்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு துணை தாசில்தார் பாரதி தலைமையில் அதிகாரிகள் அச்சமங்கலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. பாரதி புகார் படி, பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர். அதேபோல கனிம வள பிரிவு ஆர்.ஐ., அருண்குமார் தலைமையில் அதிகாரிகள் மூங்கில்புதுார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்ற லாரியை சோதனையிட்டதில், கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. அருண்குமார் புகார் படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் லாரியை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை