உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரையில் திருவண்ணாமலை குறியீட்டுடன் 17ம் நுாற்றாண்டை சேர்ந்த 3 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

ஊத்தங்கரையில் திருவண்ணாமலை குறியீட்டுடன் 17ம் நுாற்றாண்டை சேர்ந்த 3 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரையில், 17ம் நுாற்றாண்டை சேர்ந்த, திருவண் ணாமலை குறியீட்டுடன் கூடிய, 3 கல்வெட்டுகள் கண்டறியப் பட்டுள்ளன.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத் தங்கரையிலுள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் வெங்கடேசன், செந்தில் ஆகியோர் தகவலின் படி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, ஊத்தங்கரை ஒன்றியம் கானம்பட்டி இருசங்கு குட்டை என்ற இடத்திலுள்ள பாறை மேற்பகுதியின், 3 இடங்களில் கல்வெட்டு மற் றும் குறியீடுகள் இருப்பதை கண்டறிந்துள்ளது.இது குறித்து, ஓய்வு பெற்ற அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: ஊத்தங்கரையில் கிடைத்த, 17ம் நுாற்றாண்டை சேர்ந்த கல்வெட்டிலுள்ள குறியீடுகளில், திருவண்ணாமலை தீபம் ஏற்றுவதை குறிக்கும், திருவண் ணாமலையின் முக்கோண குறியீடு உள்ளது. இதனுடன், கோபுரம், சூரியன், சந்திரன், வாள் குறியீடுகளும் உள்ளன. முதல் கல்வெட்டில், மகதை மண்டலத்தை சேர்ந்த ஏமாடு பனையதம்பாள் மற்றும் பெரிய செல்வி இருவரும், மணல் மற்றும் பூமி இருக்கும் வரை இருப்பார்கள் எனவும், அவர்களின் நினைவாக இலக்கியன் என்பவர் குறித்துள்ளார். மேலும் மற்ற, 2 கல்வெட்டுகளில், அண்ணாமலை என்ற திருவண் ணாமலை என்பவரின் வயது, 77 எனவும், வன்நெஞ்சப்பெரும் சானார் என்ற வீரரின் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. தொலை துாரத்திலிருந்து இவ்வழியாக திருவண்ணாமலைக்கு சென்ற பக்தர்கள் இக்கல்வெட்டுகளை ஏற்படுத்தி உள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.ஆய்வில், கிருஷ்ணகிரி மாவட்ட அருங்காட்சியக காப் பாட்சியர் சிவக்குமார், வரலாற்று ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பாலாஜி, செந் தில், வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை