| ADDED : டிச 05, 2025 11:20 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சுற்றுவட்டா-ரத்தில், 3 மாத ஆண் குழந்தை உட்பட, 4 பேர் மாயமாகி உள்ளனர்.திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் நிஷாந்த்-அனன் சுசானா, 21. இவர், ஓசூர் அடுத்த சின்ன எலசகிரி, விநாயகர் கோவில் தெருவில் கணவ-ருடன் வசித்து வந்தார். கடந்த, 1ம் தேதி வீட்டிலி-ருந்து வெளியே சென்றவர் மாயமானார். அவரது கணவர் புகார் படி, ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர். சூளகிரி அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர், 15 வயது, பிளஸ் 1 மாணவி. கடந்த, 2ல், வீட்டிலி-ருந்து வெளியில் சென்றவர் மாயமானார். மாணவியின் பெற்றோர், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதில், சூளகிரி அடுத்த காளிங்காவரத்தை சேர்ந்த ஸ்ரீகுமார், 22, என்ற வாலிபர் மீது சந்தேகம் இருப்-பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி போலீசார் விசாரிக்கின்றனர்.வேப்பனஹள்ளி அடுத்த தொட்டகணவாயை சேர்ந்தவர் வனிதா, 23. இவர், தன் மூன்று மாத ஆண் குழந்தையுடன் நேற்று முன்தினம், வீட்டி-லிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் புகார் படி, வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.