உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெங்களூருவிலிருந்து கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்

பெங்களூருவிலிருந்து கடத்திய 400 கிலோ குட்கா பறிமுதல்

போச்சம்பள்ளி, டிச. 20-கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ., அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு கிருஷ்ணகிரி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில், கண்ணன்டஹள்ளி பிரிவு சாலையில் ரோந்து பணியில் இருந்தனர்.அப்போது பெங்களூருவிலிருந்து வந்த, சென்னை பதிவெண் கொண்ட ஹோண்டா வினு கார், அதிவேகமாக சென்றது. அதை துரத்திச்சென்ற போலீசார், மத்துார் டோல்கேட்டில் காரை மடக்கி சோதனை செய்தனர். அதில், தடைசெய்யப்பட்ட, 403 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததும், அவை திருவண்ணாமலைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து புகையிலை பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை