உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மாவட்ட கலைத்திருவிழா போட்டி 592 மாணவ, மாணவியர் பங்கேற்பு

மாவட்ட கலைத்திருவிழா போட்டி 592 மாணவ, மாணவியர் பங்கேற்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று நடந்தது. இதில், 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, 'பசுமையும் பாரம்பரியமும்' என்ற தலைப்பில், நாட்டுப்புற பாடல், வில்லுப்பாட்டு, மெல்லிசை, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், ஓவியம், மணற்சிற்பம், களிமண் பொம்மை தயாரித்தல், வீதி நாடகம், தெருக்கூத்து, பறை, நாதஸ்வரம், கீபோர்டு வாசித்தல், பொம்மலாட்டம் என, தனிநபர் போட்டிகள் 26 பிரிவும், குழு போட்டிகள், 8 பிரிவும் என மொத்தம், 34 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.நிகழ்வில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி வரவேற்றார். சி.இ.ஓ., (பொ) முனிராஜ், போட்டிகளை துவக்கி வைத்தார். டி.இ.ஓ., மோகன், உதவி திட்ட அலுவலர் மகேந்திரன், தலைமை ஆசிரியர் நளினி ஆகியோர் பங்கேற்றனர். இப்போட்டிகளில், 10 ஒன்றியங்களில் இருந்து, 592 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை