உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை; விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை; விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

ஓசூர்: ஓசூர், தேன்கனிக்கோட்டை, போச்சம்பள்ளி அரசு ஐ.டி.ஐ.,க்களில், நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை அடுத்த மாதம், 13ம் தேதி வரை நடக்கிறது. www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். கலந்தாய்வு குறித்த விவரங்கள், இதே இணையதளத்தில் வெளியிடப்படும். 14 முதல், 40 வயதுக்குட்பட்ட ஆண்கள், 14 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வயது உச்சவரமின்றி விண்ணப்பிக்கலாம். 8ம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்ப கட்டணம், 50 ரூபாய் செலுத்த வேண்டும். பயிற்சியாளர்களுக்கு மாதம், 750 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதுதவிர, விலையில்லா பாடப்புத்தகம், வரைபட கருவிகள், லேப்டாப், சீருடை, மிதிவண்டி, பஸ் பாஸ், ஷூ ஆகியவை வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சியாளர்கள், அருகில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரி விடுதியில் தங்க பரிந்துரை செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு, ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யை, 04344 262457, 95978 12767 என்ற எண்களிலும், தேன்கனிக்கோட்டை ஐ.டி.ஐ.,யை, 94425 25608 என்ற எண்ணிலும், போச்சம்பள்ளி ஐ.டி.ஐ.,யை 97860 50759 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ