உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஜெலட்டின் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி

ஜெலட்டின் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி

போச்சம்பள்ளி, டிச. 18-போச்சம்பள்ளியில், நேற்று முன்தினம் ஜெலட்டின் குச்சி வெடித்ததில், லேத் பட்டறை உரிமையாளர் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியான நிலையில், நேற்று மேலும் ஒருவர் பலியானார். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலுள்ள, திருப்பத்துார் சாலையில், சுண்டகாப்பட்டியை சேர்ந்தவர் ஜெய்சங்கர், 40. இவர் 'லட்சுமி இன்ஜினியரிங் ஒர்க்ஸ்' என்ற பெயரில் லேத் பட்டறை நடத்தி வந்தார். அவரிடம் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு ஜிம்மாண்டியூரை சேர்ந்த டிராக்டர் உரிமையாளர் சங்கர், 38, கொடுத்தனுப்பிய ஜெலட்டின் குச்சிகளை வைத்து பூட்டிய பாக்ஸை, டிராக்டர் டிரைவர் மாரியப்பன், 42, கொடுத்துச் சென்றார். பூட்டிய பாக்ஸை, டிரிலிங் மிஷின் மூலமாக, ஜெய்சங்கர் திறக்க முயற்சித்தபோது, பாக்ஸ் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஜெய்சங்கர் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார். படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த, அவரின் உதவியாளர் திருப்பத்துார் மாவட்டம், நத்தம் கிராமத்தை சேர்ந்த சேகர், 36, நேற்று உயிரிழந்தார். போச்சம்பள்ளி போலீசார் டிராக்டர் உரிமையாளர் சங்கரை கைது செய்தனர். டிரைவர் மாரியப்பன் போலீஸ் கஸ்டடியில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை