உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

ஓசூர், மத்திகிரி அடுத்த பேலகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் பசுவராஜ், 29, கூலித்தொழிலாளி. இவர் வீட்டிற்கு அருகில் வசிப்பவர் சிவசங்கரி, 24, தனியார் நிறுவன ஊழியர். இவர் வெளியில் சென்று வரும்போதெல்லாம் பக்கத்து வீட்டில் வசித்த பசுவராஜ் மறைத்திருந்து தன்னை பார்த்ததாக கூறி கடந்த, 8ல், தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சிவசங்கரியை பசுவராஜ், அவர் வீட்டின் உரிமையாளர்கள் நாராயணசாமி, 57, மஞ்சளா, 47, நண்பர் சேகர், 40 ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். காயமடைந்த சிவசங்கரி, ஓசூர் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி மத்திகிரி போலீசார், பசுவராஜ் உள்பட, 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி