உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அனுமதியின்றி எருது விடும் விழா; 5 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி எருது விடும் விழா; 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, பர்கூர் அடுத்த பட்லப்பள்ளியில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இது குறித்து பட்லப்பள்ளி வி.ஏ.ஓ., மரகதம் அளித்த புகார்படி பர்கூர் போலீசார் எருது விடும் விழாவை ஏற்பாடு செய்த அப்பகுதியை சேர்ந்த ரஜினி, 40, அருள், 34, சின்னத்தம்பி, 40, விஜயன், 47, அண்ணாதுரை, 32, ஆகியோர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ