ரூ.10 லட்சத்தில் அமைக்கும் சிமென்ட் சாலை பணி துவக்கம்
ஓசூர், ஓசூர் மாநகராட்சி, 4வது வார்டுக்கு உட்பட்ட மாருதி நகர் சத்யா மெஸ் அருகில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சிமென்ட் சாலை அமைக்க, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தனர். மாநகர துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், கவுன்சிலர் ஆறுமுகம், பகுதி அவைத்தலைவர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.