உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க முதல்வர் நடவடிக்கை

மா விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க முதல்வர் நடவடிக்கை

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., நிருபர்களிடம் கூறியதாவது:'மா' விவசாயிகளின் துயரத்தை போக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின், இழப்பீடு வழங்கி உதவிட பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதை, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.பி.,க்கள் கனிமொழி, சிவா, ஓசூர், எம்.எல்.ஏ., பிரகாஷ் ஆகியோருடன் நானும் சென்று, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானிடம் வழங்கினோம். அப்போது, 'மா' விவசாயிகள், மாங்கூழ் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை கள் குறித்து எடுத்துரைத்தோம். நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார். எனவே, நடப்பாண்டில் பாதிக்கப்பட்டுள்ள 'மா' விவசாயிகளுக்கு முதல்வர் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பார்.விவசாயிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்கப்படும். தவிர ஆர்டர்கள் குறைக்காமல், அரவை செய்யப்படும் மாங்கூழ் அனைத்தையும் கொள்முதல் செய்ய, குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் அனைத்து மாங்கூழ் தொழிற்சாலைகளிலும் சீசன் முடியும் வரை எவ்வித சேதாரமும் இல்லாமல் மாம்பழங்கள் கொள்முதல் செய்வர். கடந்தாண்டு வறட்சியால் பாதித்த, 668 'மா' விவசாயிகளுக்கு இழப்பீடு 2.65 கோடி ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை