மூச்சுத்திணறி குழந்தை சாவு
ஓசூர்: ஓசூர் மூக்கண்டப்பள்ளி என்.டி.ஆர்., நகரை சேர்ந்தவர் ஷாநவாஸ், 28. சிக்கன் கடையில் பணியாற்றுகிறார். இவருக்கு, இரண்டரை வயதில் பெண் குழந்தை இருந்தது. நேற்று முன்தினம் காலை திடீரென குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் குழந்தை உயிரிழந்தது. சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.