உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 30 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

30 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

தளி, கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே கும்ளாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், தனியார் நிறுவனங்கள் பங்களிப்புடன், கவுரம்மா கோவில் வளாகத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. மாவட்ட சுகாதார அலுவலர் ரமேஷ்குமார் தலைமை வகித்தனர். தளி வட்டார மருத்துவ அலுவலர் சச்சரிதா முன்னிலை வகித்தார். விழாவில் மொத்தம், 30 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ