கட்டட தொழிலாளி மாயம்
சூளகிரி; கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த கோப-சந்திரத்தை சேர்ந்தவர் முருகன், 26. கட்டட தொழிலாளி; இவரது மனைவி கடந்த இரு ஆண்-டுக்கு முன் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனால் விரக்தியடைந்த முருகன் கடந்த மாதம், 14ம் தேதி மதியம், 3:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவ-ரது தாய் முனியம்மா, 50, சூளகிரி போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான முருகனை தேடி வருகின்றனர்.