வாகன விபத்தில் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி :ஓசூர், நெசவாளர் தெருவை சேர்ந்தவர் முரளி, 45. ஓசூரிலுள்ள தனியார் கல்லுாரி ஒன்றின் வளாகத்தில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த, 13ல், பஜாஜ் பல்சர் பைக்கில் சென்றுள்ளார். இரவு, 10:30 மணியளவில், ஒமதேப்பள்ளி அருகே, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.