மேலும் செய்திகள்
கெலவரப்பள்ளி அணைக்கு 592 கன அடி நீர்வரத்து
01-Sep-2024
கிருஷ்ணகிரி: மாவட்டத்தில் மழையின்றி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிந்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த மாத இறுதியில் மாவட்டம் முழுவதும் நல்ல மழையால், ஆறு, குளம், குட்டை மற்றும் அணைகள் வேகமாக நிரம்பின. பின் மழையின்றி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 10ல் வினாடிக்கு, 443 கன அடி நீர்வரத்து இருந்தது. தற்போது மழையின்றி நேற்று, 9 கன அடியாக நீர்வரத்து சரிந்தது. இடது மற்றும் வலதுபுற வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு, 185 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் நேற்று, 49 அடியாக நீர்மட்டம் இருந்தது. இதேபோல், பாரூர் ஏரியின் மொத்த கொள்ளளவான, 15.60 அடியில் நேற்று, 15.20 அடியாக நீர்மட்டம் இருந்தது. ஏரிக்கு, 13 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. ஏரியில் இருந்து, 43 கன அடி நீர், வாய்க்காலில் திறக்கப்பட்டிருந்தது. ஊத்தங்கரை பாம்பாறு அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ளது. அணையின் மொத்த உயரமான, 19.60 அடியில் நேற்று, 14.07 அடியாக நீர்மட்டம் இருந்தது. சூளகிரி சின்னாறு அணைக்கு நீர்வரத்தின்றி, அணை வறண்டுள்ளது.
01-Sep-2024