உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு பள்ளியில் உணவு கூடம்

அரசு பள்ளியில் உணவு கூடம்

ஓசூர்: ஓசூர் அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளி யில், 360 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்கள் அமர்ந்து சாப்பிட தனியாக உணவுக்கூடம் இல்லை. பெங்களூரு கியாவாணி என்ற தனியார் தொழிற்சாலையின், சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்து உண-வுக்கூடம் கட்ட, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநகராட்சி வரிவிதிப்பு குழு தலைவரும், பள்ளி பெற்றோர் ஆசி-ரியர் கழக தலைவருமான சென்னீரப்பா தலைமையில், பூஜை செய்து கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. தனியார் நிறுவன மேலாளர் சிவக்குமார், கோபாலப்பா, கவுன்சிலர் பாக்கியலட்-சுமி, தலைமையாசிரியர் ராணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !