உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வடிகால் கால்வாய் பணி துவக்கம்

வடிகால் கால்வாய் பணி துவக்கம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, 6 லட்சம் ரூபாய் மதிப்பில், நகராட்சி, 2வது வார்டு, பழையபேட்டை பங்காளி தெருவில் சிமென்ட் சாலை, 9வது வார்டு மோகன்ராவ் காலனியில், 14.6 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் கல்வெட்டும் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, நகர செயலாளர் கேசவன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாதையன், முன்னாள் நகர இளைஞரணி செயலாளர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை