கார் மோதி விவசாயி பலி
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த பத்திரிக்கான்கொட்டாயை சேர்ந்தவர் மாதையன், 56, விவசாயி. கடந்த, 7 இரவு இவர், ஆவின் மேம்பாலம் அருகில், கிருஷ்ணகிரி சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற ஹூண்டாய் ஐ10 கார் மோதியது. படுகாயமடைந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார். கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.