உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / இந்த ஆண்டில் இரண்டாவது முறையாககே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து பூஜ்யம்

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாககே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து பூஜ்யம்

கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையாலும், நீர்வரத்து உள்ளது. அணை கட்டியதிலிருந்து முதல் முறையாக கடந்த, 2020 மே, 1ல் அணைக்கு நீர்வரத்தின்றி அணை வரண்டது.பின் நீர்வரத்து துவங்கி தண்ணீர் தேக்கினாலும், அணையில், 50 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.கடந்தாண்டு அக்., 9ல் அணை நீர்மட்டம், 50 அடியை எட்டியது. அன்று முதல் அணைக்கு தொடர்ந்து சீரான நீர்வரத்து இருந்ததால், கடந்த மார்ச், 8 வரை தொடர்ந்து, 150 நாட்களாக அணையில், 50 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச், 10ல் இந்தாண்டில் முதல் முறையாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது.பின்னர், 4 நாட்களுக்கு பிறகு, நீர்வரத்து துவங்கி, சீரான நீர்வரத்து இருந்து வந்தது.பின்னர் மழையின்றி கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 2 நாட்களாக தலா, 12 கன அடியாக நீர்வரத்து குறைந்த நிலையில், நேற்று இந்தாண்டில், 2வது முறையாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. அணையிலிருந்து, 12 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை மொத்த உயரமான, 52 அடியில், நேற்று, 49.05 அடியாக நீர்மட்டம் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ