அரசு பள்ளி மாணவ, மாணவியர்மாநில கலைத்திருவிழாவில் 2ம் இடம்
அரசு பள்ளி மாணவ, மாணவியர்மாநில கலைத்திருவிழாவில் 2ம் இடம்கிருஷ்ணகிரி: கோவை கே.பி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், கலைத்திருவிழா போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த, ஒன்று முதல், 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மாநில அளவிலான பரத நாட்டிய போட்டிகள் கடந்த, 4ல் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி ஒன்றியம், நெடுமருதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை சேர்ந்த குந்தவை குழுவினர் பரத நாட்டிய போட்டியில் பங்கேற்றனர். இவர்கள், பானை மீது நடனம் ஆடி, கால் விரல்களால் கோலம் வரைந்து, நடனத்தின்போது சக்கராசனம் செய்து காட்டி அசத்தினர். இதனால் இக்குழுவினர், மாநில அளவில், 2ம் இடத்தில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்த குந்தவை குழுவில் இடம் பெற்றிருந்த, கவிநிலா, பிரதாப், ஜெகதீஷ்குமார், மவுனீஷ், வர்ஷினி, குணஸ்ரீ, ஓவியா, துர்சாந்த் ஆகிய மாணவ, மாணவியரையும், நடன பயிற்சியாளர்கள் அகிலா, வினோத்குமார் ஆகியோரையும், தலைமை ஆசிரியர் ஆனந்தி, பகுதி நேர ஆசிரியர் அம்சவள்ளி, அலுவலர்கள் பழனிசாமி, மரியரோஸ், வெங்கடேசன் ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.