மேலும் செய்திகள்
முதல்வர் கோப்பை போட்டி வென்றவர்களுக்கு பாராட்டு
23-Sep-2025
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 267 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இதில், தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க, அலுவலர்களுக்கு கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார்.டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தனஞ்செயன் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
23-Sep-2025