மேலும் செய்திகள்
கொசு ஒழிப்பு பணி மும்முரம்
19-Aug-2025
கிருஷ்ணராயபுரம், மேட்டு மகாதானபுரத்தில், பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த மகாதானபுரம் பஞ்சாயத்து, மேட்டு மகாதானபுரத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்தது. மழை காலங்களில் வீடுகளில் அதிகமான மழைநீர் தேங்கும் போது, அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகிறது. எனவே, அதிலிருந்து மக்களை காக்கும் வகையில், சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணி நடந்து வருகிறது. நேற்று கழிவுநீர் தேங்கிய இடங்களில் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது. நல்ல குடிநீர் மூடி வைக்கப்பட்டு, பிளாஸ்டிக் பொருட்கள், பழைய டயர்கள் அகற்றும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டனர்.
19-Aug-2025