உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.69 லட்சத்தில் 198 சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த ஐ.ஜி.,

ரூ.69 லட்சத்தில் 198 சிசிடிவி கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்த ஐ.ஜி.,

ஓசூர், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில், 69 லட்சம் ரூபாய் மதிப்பில், 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி., செந்தில்குமார் திறந்து வைத்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, 76 இடங்களில், 198 'சிசிடிவி' பொருத்தப்பட்டுள்ளன. அதன் கட்டுப்பாட்டு அறை திறப்பு விழா ராயக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., செந்தில்குமார் தலைமை தாங்கி கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்தார். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை முன்னிலை வகித்தார்.பின்னர் ஐ.ஜி., செந்தில்குமார் கூறியதாவது: 69 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகளை, கார்ப்பரேட் சமூக அக்கறை பங்களிப்பு திட்டத்தில், டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் நன்கொடையாக வழங்கி உள்ளது. தற்போதைய சூழலில் குற்ற சம்பவங்களை கண்காணித்து தடுக்க, 'சிசிடிவி' கேமராக்கள் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளது. அந்த கால திரைப்படங்களில் வரும் உள்ளதை உள்ளபடி காட்டும் மாயக்கண்ணாடி போல, உண்மை கண்ணாடிகளாக இந்த, 'சிசிடிவி' கேமராக்கள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை கூறுகையில், “இந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் வாயிலாக குற்றச்சம்பவங்கள் தடுக்கப்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கண்டறிய ஏதுவாக இருக்கும்,” என்றார்.தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, எஸ்.ஐ.,க்கள் கார்த்திகேயன், சிற்றரசு, தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ